- திருச்சி
- திருச்சி மாவட்டம்
- ஆயுத படைகள்
- சமூக மையம்
- மத்திய மண்டலம்
- ஐஜி
- கார்த்திகேயன்
- மதுரை எம்எஸ் செல்லமுத்து அறக்கட்டளை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், காவலர்களுக்கான ஆற்றுப்படுத்தும் திறன்கள் (வெல்பீயிங்) தொடர்பாக, இரண்டு நாட்கள் சிறப்பு செய்முறை பயிற்சி முகாம், திருச்சி மாவட்ட ஆயுதப்படை சமுதாயக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியை மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயனதொடங்கி வைத்தார். இதில், மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக பேராசிரியர் கண்ணன் மற்றும் குருபாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மத்திய மண்டலத்தில் உள்ள 60 போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிய கருத்துரைகள், ஆற்றுப்படுத்தும் கலைகள், முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.
The post காவலர்களுக்கான ஆற்றுப்படுத்தும் திறன்கள் சிறப்பு செய்முறை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.